தமிழ்நாடு
பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை!
பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கவில்லை என்பதும் அதன் பின் தற்போது தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பதும் ஆனால் தற்போது மழை நின்று விட்டதை அடுத்து மீண்டும் பள்ளி கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்கு பதிலாக இன்னொரு நாளில் பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.