தமிழ்நாடு
நெல்லை பள்ளி விபத்து: தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணமாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி தாளாளர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக தலைமை ஆசிரியை உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஸ்பெண்ட் குறித்த உத்தரவை பள்ளியின் நிர்வாக மேலாளர் சற்றுமுன் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முதல்கட்ட ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கோட்டாட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு கடந்த சில நாட்களாக செய்து வந்த ஆய்வு அறிக்கையை தற்போது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நெல்லை கட்டிட விபத்து காரணமாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.