தமிழ்நாடு
நெல்லை பள்ளிக்கு இன்று முதல் காலவரையின்றி விடுமுறை: விசாரணை தீவிரம்!
நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று திடீரென கழிப்பறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த விபத்திற்கு பள்ளியின் நிர்வாகம்மற்றும் தலைமை ஆசிரியரின் அலட்சியம்தான் காரணம் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில் நேற்று தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் அதுமட்டுமின்றி தலைமை ஆசிரியை, தாளாளர் மற்றும் கழிப்பறை கட்டிட ஒப்பந்ததாரர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விபத்துக்குள்ளான நெல்லை சாஃப்ட்வேர் மேல்நிலைப்பள்ளி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் இந்த விபத்து காரணமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும், பள்ளி மீது நேற்று கற்கள் வீசப்பட்டதாகவும், பள்ளி பொருட்கள் சூறையாடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இன்று முதல் காலவரையின்றி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது