தமிழ்நாடு
தமிழக அரசின் மாநிலப்பாடல் அறிவிப்பு: எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு!
தமிழ்நாடு அரசின் மாநில பாடல் இதுதான் என அதிகாரபூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ள தமிழக அரசு, இந்த பாடல் ஒலிக்கும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது காஞ்சி சங்கராச்சாரியார் எழுந்து நிற்கவில்லை என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீர்ப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறைவணக்கப் பாடல் தான் என்றும் தேசிய கீதம் பாடும் போது நிற்க வேண்டும் என்ற நிபந்தனை தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது இல்லை என்றும் தீர்ப்பளித்து இந்த வழக்கிலிருந்து காஞ்சி சங்கராச்சாரியாரை விடுதலை செய்தது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றில் தமிழ்தாய் வாழ்த்து என்பது தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அறிவிப்பு செய்து உள்ளார்.
எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#தமிழ்த்தாய்_வாழ்த்து –
தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு – பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க அரசாணை வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/bAQWeGCI5p— TN DIPR (@TNDIPRNEWS) December 17, 2021