இந்தியா
டெல்லியில் 2 கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு ஓமைக்ரான் கொரோனா பாதிப்பு!
டெல்லியில் ஜிம்பாபேவ் சென்று திரும்பியவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கு டெல்லியில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் இவர் கொரோனா தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர் என்பதை டெல்லி அரசு உறுதி செய்துள்ளது.
டெல்லியின் முதல் ஓமைக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நபர் டான்சானியா சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் இந்தியாவில் 32 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளிநாட்டு விமான பயணிகளிடம் விமான நிலையத்தில் தீவிர கொரோனா சோதனைக்கு பிறகே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.