Connect with us

இந்தியா

அடுத்த முப்படை தலைமை தளபதி யார்? ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கருத்து!

Published

on

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சங்கர் ராய் சவுத்ரி அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்கள். இதனை அடுத்து 13 பேரின் உடல்களை டெல்லிக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இன்று டெல்லியில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியான பிபின் ராவத் அவர்கள் மறைவை அடுத்து அடுத்த தலைமை தளபதி பதவிக்கு வருபவர் யார் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ தளபதி சங்கர் ராய் சவுத்ரி அவர்கள் கூறியபோது, ‘மறைந்த ராணுவ தளபதி பிபின் ராவத் அவர்கள் சிறந்த ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் முப்படைகளுக்கும் தேவையான மாற்றங்களை அவர் செய்து வந்தார் என்றும் அவரது மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

கடற்படை விமானப்படை மற்றும் தரைப்படை ஆகிய மூன்று படைகளிலும் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வருவதில் பிபின் ராவத் சிறப்பாக பணியாற்றினார் என்றும் அடுத்த முப்படை தளபதி தேர்வு செய்யப்படுவதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் சீனியாரிட்டி மற்றும் திறமையின் அடிப்படையில் முப்படை தளபதி தேர்வு செய்ய வேண்டும் என்றும் அந்த பணிக்கு தகுதியானவரா என்பதை அறிந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவின் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்ற அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!