சினிமா செய்திகள்
நான் திமிர்ப்பிடித்தவன் இல்லை: 40 இயக்குனர்கள் கதை சொல்லும்போது தூங்கிய அஸ்வின் பேட்டி!
40 இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தூங்கிவிட்டேன் என்று ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கூறிய அஸ்வின் தற்போது அது குறித்து விளக்கமளித்துள்ளார்.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்து வரும் முதல் திரைப்படம் ’என்ன சொல்ல போகிறாய்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் அஸ்மின் பேசியபோது ’என்னிடம் 40 இயக்குனர்கள் கதை சொல்ல வந்தார்கள் என்றும் அவர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால் நான் தூங்கி விடுவேன் என்றும் நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் கதை தான் என்றும் இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது என்றும் அவர் பேசினார்.
அஸ்வினின் இந்தப் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படம் ரிலிஸாகும் முன்பே அஸ்வினுக்கு இவ்வளவு திமிரா என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது விளக்கமளித்துள்ளார்.
நான் திமிர் பிடித்தவன் இல்லை என்றும் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டேன் என்பது சும்மா ஜாலிக்காக கூறினேன் என்றும் அத்தனை இயக்குனர்களும் கதை கேட்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அஸ்வினின் இந்த விளக்கத்தை மீறியும் கடந்த இரண்டு நாட்களாக அஸ்வினின் பேச்சு சமூக வலைதளங்களில் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.