தமிழ்நாடு
மயானங்களில் உள்ள ஜாதிப்பெயர்களை நீக்கவேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு!
உயிருடன் இருக்கும் போது தான் ஜாதி பாகுபாடு என்றால் இறந்த பின்னரும் ஜாதி பாகுபாடு காணப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு இருக்கும் அவல நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான மயானம் இருக்க வேண்டும் என்றும் மயானங்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் மயானங்களில் உள்ள ஜாதி பெயர் பலகைகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும் என்றும் தமிழ் நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயானங்களில் ஜாதிப்பாகுபாட்டை நீக்கும் வகையில் ஜாதி பெயர் பலகையை நீக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.