Connect with us

இந்தியா

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Published

on

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரிய மஹாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்கால உத்தரவு குறித்த தகவலையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யக்கோரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தியதை அடுத்து அப்போதைய முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்று ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு விதிவிலக்கு பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின் கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயத்தை அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும் இடைக்கால தடை உத்தர்வு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் இது குறித்து கருத்துக் கூறுகையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க போவதில்லை என்றும் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரி மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மட்டும் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு தமிழகத்தின் ஜல்லிக்கட்டை ஒப்பிட முடியாது என்றும் தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு கலந்த பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா13 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்13 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா14 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்14 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!