தமிழ்நாடு
10 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை!
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
இதனை அடுத்து மேற்கண்ட 10 மாவட்டங்களில் உள்ள நிர்வாகங்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் விடாமல் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.