Connect with us

தமிழ்நாடு

ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்: அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் 20 மாதங்களுக்கு பின்னர் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என புதுவை அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கவில்லை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் புதுவையில் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. 20 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் இன்று மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வகுப்பறைகள் அரைநாள் மட்டுமே இயங்கும் என்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை எனவும் பெற்றோர் அனுமதி கடிதம் மாணவர்கள் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொரோனா தடுப்பு ஊசி செலுத்திய ஆசிரியர்கள் ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுவையில் அரைநாள் மட்டுமே ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இயங்கிய நிலையில், இன்று முதல் முழு நேர வகுப்புகள் இயங்கும் என்றும் புதுவை மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!