தமிழ்நாடு
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இன்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிசம்பர் 2-ம் தேதி வரை சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே வரும் நாட்களிலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நாளையும் கன மழை காரணமாக பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்து வேறு எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவருகிறது என்பதை பலரும் பொறுத்திருந்து பார்ப்போம்.