தமிழ்நாடு
கனமழை எதிரொலி: நாளை பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு!
![school - Bhoomitoday school](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/school.jpg)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு என்பதும் தெரிந்ததே. தீபாவளிக்குப் பின்னர் நேற்று முன்தினம் தான் பள்ளிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திறக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள மூன்றாவது காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பதும், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளை முதல் சனிக்கிழமை வரை அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்பதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கனமழை எதிரொலியால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல் மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.