தமிழ்நாடு
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாவதில் தாமதமா?
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக்குவதில் 24 மணி நேரம் தாமதமாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது என்பதும் இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி விரைவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.
ஆனால் தெற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இதுவரை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே நிலையில் நீடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக மேலும் 24 மணி நேரம் கால தாமதம் ஆகலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதன் பின்னர் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் தான் தமிழகத்தை நெருங்க வாய்ப்பிருப்பதாகவும் அதன் காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.