தமிழ்நாடு
கணவரை உயிருடன் புதைத்து மண்ணை மூடிய தாய்: போலீஸில் காட்டி கொடுத்த மகள்!
கணவரை உயிருடன் குழிதோண்டிப் புதைத்த மனைவி குறித்து அவர்களது மகளே போலீசில் காட்டிக் கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை சேர்ந்த 60 வயது நாகராஜ் என்பவர் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் தான் ஜீவசமாதி அடைய வருவதாகவும் அதனால் குழிதோண்டி புதைத்து விடும்படியும் மனைவி லட்சுமியுடன் கூறியுள்ளார்.
இதனை அடுத்து கணவரின் விருப்பத்திற்கிணங்க தனது வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை மரம் அருகே குழிவெட்டி கணவரை உயிருடன் புதைத்து ஜீவசமாதி செய்துள்ளார் லட்சுமி.
இந்த நிலையில் நாகராஜ் – லட்சுமியின் தம்பதியின் மகள் தமிழரசி தனது தந்தை எங்கே என்று கேட்டபோது வெளியே சென்றிருக்கிறார் என்று கூறி லட்சுமி சமாளித்துள்ளார். தொடர்ந்து ஒருசில நாட்கள் இதுபோன்று கூறிய நிலையில் தமிழரசி தனது தாயிடம் தந்தையை எங்கே என கேட்டு தகராறு செய்த போதுதான் தாயார் லட்சுமி உண்மையை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை மனைவியே குழிதோண்டிப் புதைத்ததும், அதனை போலீசில் காட்டிக் கொடுத்த மகள் குறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.