தமிழ்நாடு
4 மாவட்டங்களில் கனமழை, 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!
இன்னும் ஒரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இன்று முழுவதும் நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளையும் முழு கொள்ளளவை எட்டி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.