தமிழ்நாடு
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட்?
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் சென்னை மக்கள் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 6 மாவட்டங்களில் உள்ளவர்கள் தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும்படியும், அரசு தரும் எச்சரிக்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு தேவையான பொருட்களையும் மேற்கண்ட 6 மாவட்டங்களில் உள்ளவர்கள் வாங்கி வைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கண்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.