தமிழ்நாடு
ஒரு மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை!
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் என்று கூறிய 29 மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகை, தருமபுரி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, புதுச்சேரி, காரைக்கால்.