தமிழ்நாடு
10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது என்பதும் இந்த தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என தேர்வுத் துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பத்தாம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் நவம்பர் 19ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.