தமிழ்நாடு
தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு: துல்லியமாக கணித்த பஞ்சாங்கம்!
தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் நீர்நிலைகள் அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் கனமழை பெய்து வருகிறது என்பதும் சென்னையில் உள்ள நீர்நிலைகள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் நீர்நிலைகள். ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும் என்றும் இதன் காரணமாக அதிக கனமழை பெய்யும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 19ஆம் தேதி வரை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும் என்றும் கார்த்திகை மாத இறுதி வரை மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் முன்கூட்டியே பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு பிறகு சென்னையில் விடிய விடிய மழை பெய்யும் என்று சென்னைக்கு கிழக்கே புயல் வீசி வீசும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டு உள்ளது போலவே சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.