இந்தியா
விசாகப்பட்டினத்தில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே திடீர் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல இடங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியே வந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள வேப்பகுண்டா, பெண்ந்துர்த்தி, சிம்மாசலம் அரிலோவாவா ஆகிய இடங்களிலும் இன்று காலை பெரும் சப்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து பாதிப்புகள் குறித்த செய்திகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.