தமிழ்நாடு
வெள்ள பாதிப்பு ஆய்வின்போது ரோட்டோரக்கடையில் டீ சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்! வைரல் புகைப்படங்கள்!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் இந்த மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே நேரடியாக சென்று பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சென்னையி தனது சொந்த தொகுதியான கொளத்தூர் பல பகுதிகளில் அவர் நேரில் ஆய்வு செய்து மீட்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளை மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்றுள்ளார். அங்கு அவர் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டார் என்பதும் வெள்ள நீர் வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செங்கல்பட்டு செல்லும் வழியில் மாம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள தேநீர்க் கடையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சூடாக டீ சாப்பிட்டார். டீ சாப்பிட்டுவிட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முழுவதும் ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.