Connect with us

தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் புரட்டி எடுக்கும் கனமழை: வீட்டை விட்டு வெளியேறாத பொதுமக்கள்!

Published

on

சென்னையில் மீண்டும் கனமழை புரட்டி எடுப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் உள்ளனர்.

வங்கக்கடலில் தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருக்கும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்று இரவு முழுக்க முழுக்க கனமழை பெய்ததை அடுத்து இன்று காலை ஓரளவுக்கு மழை குறைந்து இருந்தது. இந்த நிலையில் திடீரென பிற்பகலில் மீண்டும் சென்னையில் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே தேங்கியிருந்த தண்ணீருடன் மழைநீரும் சேர்ந்து கொள்வதால் ஒரு சில பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மிக தீவிர மழையை ஏற்படுத்தும் என்றும் இதனால் சென்னையில் மழை பெய்ய தொடங்கி உள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகளான கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், அண்ணா சாலை, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தற்போது தீவிர மழை பெய்து வருகிறது.

மேலும் ஈக்காட்டுத்தாங்கல், சோழபுரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, கோடம்பாக்கம், நசரத்பேட்டை, மீனம்பாக்கம், கிண்டி, நந்தம்பாக்கம், சிந்தாதரிப்பேட்டை, ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் ஆவடி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், போரூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருவதாகவும் பூண்டி மற்றும் புழல் ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியே வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ப்ரோக்கோலி: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ. 2,40,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

410 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: நீதிமன்ற உத்தரவு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

NTPC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

SIDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.40,000/- சம்பளத்தில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா4 மணி நேரங்கள் ago

தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகிறது!

பர்சனல் ஃபினான்ஸ்4 மணி நேரங்கள் ago

புதிய மற்றும் பழைய வருமான வரி முறை: உங்களுக்கு எது சிறந்தது?

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

குரூப் 2, 2A தேர்வு விண்ணப்பத்திற்கு கடைசி தேதி நீட்டிப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்4 மணி நேரங்கள் ago

ஜூலை 15 முதல் 21 வரை 12 ராசிகளுக்கான வார ராசி பலன்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்5 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!