தமிழ்நாடு
எங்கள் தொகுதி எம்.எல்.ஏவை பார்த்ததே இல்லை: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் கொதிப்பு!
எங்கள் தொகுதி எம்எல்ஏ யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் அவரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் சென்னை ராயபுரம் மற்றும் வேளச்சேரி தொகுதி மக்கள் கொந்தளிப்புடன் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பாக வட சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ராயபுரம் தொகுதியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவை என்று மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ராயபுரம் பகுதிக்கு மிக அருகில் வர என்று முதலமைச்சர்மு க ஸ்டாலின் அவர்கள் வந்தபோதிலும் ராயபுரம் பகுதிக்கு அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரிம்ஸ் மூர்த்தி என்பவர் உள்ளார் என்பதும் அவரை நாங்கள் பார்த்ததே இல்லை என்றும் அவர் இந்த தொகுதி பக்கமே வரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதேபோல் வேளச்சேரி தொகுதி மக்களும் எங்கள் தொகுதி எம்எல்ஏ எந்தவிதமான மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் வேளச்சேரி எம்.எல்.ஏ தனது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டே வெளியே வரமுடியவில்லை என்றும் டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.