தமிழ்நாடு
இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதன் காரணமாக 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அதனால் இந்த மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடல் பகுதியில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 நான்கு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக கடற்கரையை நெருங்கும் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் அவ்வப்போது கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.