தமிழ்நாடு
சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம்!
நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சாலை போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பயணிகள் துரிதமாக தாங்கள் செல்லும் இடம் சென்று சேர்வதற்கு மெட்ரோ ரயில் தற்போது சென்னை மக்களுக்கு உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பயணிகள் அதிக வருகையை கணக்கில் கொண்டு நாளை முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை முதல் 12ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், அதாவது நாளை முதல் காலை ஐந்து முப்பது மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும் ஒவ்வொரு நாளும் பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் படுத்திய அவர்கள் தெரிவித்துள்ளார்.