தமிழ்நாடு
தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு: கனமழை எச்சரிக்கை!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நவம்பர் 9ஆம் தேதிக்குள் உடனடியாக கடைக்கு திரும்ப வேண்டும் என்றும் வங்க கடல் பகுதிக்கு நவம்பர் 9 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் மிக அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை புதிய காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கி உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீண்டும் அதிக மழை பெய்யும் என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.