தமிழ்நாடு
வள்ளுவர் ஞானஸ்தானம் எடுத்துதான் திருக்குறள் எழுதினார்: திருமாவளவன்
![thiruma99 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/thiruma99.jpg)
வள்ளுவர் ஞானஸ்தானம் எடுத்துதான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்’ என்ற புத்தகத்தை இன்று திருமாவளவன் வெளியிட்டார். திருக்குறளின் மற்ற உரைகள் அனைத்தும் தவறு என்று கூறும் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய இந்த புத்தகத்தை வெளியிட்ட அவர் திருவள்ளுவர் திருக்குறளை ஞானஸ்தானம் எடுத்துதான் எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் திருக்குறளை எழுதும்போது ஞானஸ்தானம் வாங்கிதான் எழுதினார் என்று கூறும் திருமாவளவனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.