சினிமா
ஜெட் வேகத்தில் ஷங்கர் – ராம்சரன் பட படப்பிடிப்பு – வெளியான புகைப்படம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வாய்ப்பே இல்லை என்கிற நிலை உருவாகி விட்டது. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர் திடீரென தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க சென்றுவிட்டார். அப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. ’இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் வேறு படத்தை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.ஆனால் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே, இது இழுபறியாக நீடித்து வருகிறது.
இந்நிலையில், ராம் சரணை வைத்தும் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இது அரசு அரசியல் ஆக்ஷன் கதை எனவும் இப்படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். அதேபோல், நடிகை அஞ்சலியும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.