உலகம்
முடிவிற்கு வந்தது சிபிஐ வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு!
டெல்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையை நிறைவு செய்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை 45 நாட்கள் நடைபெற்றது. எல்லா வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இதன் விசாரணை நடைபெற்றது. சில நாட்கள், புதன் கிழமையும் விசாரணை நடந்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சன் கிஷான் கவுல், நீதிபதி கேஎம் ஜோசப் தரப்பு விசாரணை நடத்தியது. காங்கிரஸ் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல், அலோக் வெர்மா தரப்பில் வழக்கறிஞர் நாரிமன்.
மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் கேகே வேணுகோபால், வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா தரப்பில் வழக்கறிஞர் ரோத்தகி ஆகியோர் ஆஜராகி இதில் வாதம் செய்தனர்.