சினிமா செய்திகள்
நெருப்பு சக்தி கிடைத்ததால் ஓவராக ஆட்டம் போடும் நிரூப்!
![niroop power - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/niroop-power.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு 5 சிறப்பு காயின்கள் வழங்கப்பட்டுள்ள என்பதும் இந்த காயின்கள் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு சக்திகள் வழங்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இசைவாணிக்கு சிறப்பு சக்தி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர் மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரம் நிரூப்பிடம் நெருப்பு காயின் இருப்பதை அடுத்து அவருக்கு சிறப்பு சக்தி வழங்கப்படுகிறது. இதனை அடுத்து அவர் அக்ஷராவை தனது உதவியாளராக நியமனம் செய்து கொண்டு மற்ற போட்டியாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
குறிப்பாக காலை எழுந்தவுடன் தனது காலை உணவு படுக்கையில் இருக்க வேண்டும் என்றும் தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் பெட்ரூம் செல்ல கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்.
அந்த வகையில் இன்றும் நிரூப் தனது சக்தியின் ஆளுமையை வெளிப்படுத்தும் காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன. பெட்ரூமை விட்டு வெளியே வராதவர்களுக்கு பாகற்காய் மற்றும் பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனையை நிரூப் அளிக்கின்றார் என்பதும் ஸ்ருதி மற்றும் பாவனிரெட்டி இந்த தண்டனையை அனுபவிக்கும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் நிரூப் தனக்கு கிடைத்த சிறப்பு சக்தியை வைத்துக் கொண்டு ஓவராக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#Day30 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/SEgCRsImcs
— Vijay Television (@vijaytelevision) November 2, 2021