தமிழ்நாடு
சென்னை உள்பட மேலும் 2 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை!
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக சென்னையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து என்பதும் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது என்று குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் சென்னை உள்பட மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சற்றுமுன் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் சென்னையில் உள்ள அனைத்து மாவட்டங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்று கனமழை காரணமாக இதுவரை 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.