தமிழ்நாடு
மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்.. மத்திய அரசு புதிய விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இந்தியா முழுக்க புதிதாக மொத்தம் 14 இடங்களில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
மதுரையில் இந்த இடம் தேர்வு செய்யப்படவே பல நாட்கள் ஆனது. சென்னை, திருச்சி என்று பல இடங்கள் சோதனை செய்யப்பட்டு கடைசியில் மதுரையில் தோப்பூரில் இடம் உறுதி செய்யப்பட்டது. பல தேர்வுகள், அலைக்கழிப்புகளை அடுத்து மதுரையில் உள்ள தோப்பூர் இதற்காக தேர்வு செய்யப்பட்டது.