தமிழ்நாடு
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்த நிலையில் அந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி பாமக விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த கல்வியாண்டிலேயே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து பதிவு செய்யப்பட்ட வழக்கிn விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது
தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் அமர்வு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தாமல் உள்ஒதுக்கீடு வழங்கியது தவறானது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது