கிரிக்கெட்
இந்தியாவுக்கு 2வது தோல்வி: நியூசிலாந்து அபார வெற்றி!
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இன்றைய போட்டியிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 111 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி மிக அபாரமாக விளையாடி ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்றைய தோல்வி மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்றே கூறலாம். அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும், அடுத்த சுற்றுக்கு செல்வது மிகப்பெரிய சந்தேகம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இரண்டு முக்கிய போட்டிகளில் தோல்வி அடைந்து விட்ட இந்திய அணி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. இதனை அடுத்து இரண்டாவது இடத்திற்கு மீண்டு வர வேண்டுமென்றால் ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.