சினிமா செய்திகள்
மோகன்லாலின் அடுத்த மூன்று படங்கள் ஓடிடி ரிலீஸ் தான்: அதிரடி தகவல்
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் அடுத்து மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் என தகவல்கள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நிலையில் ஓடிடியில் பல படங்கள் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்கில் திறக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பாக கேரளாவில் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டதால் டாக்டர் படம் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 உள்பட ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்த மூன்று படங்களும் ஓடிடியில் தான் ரிலீஸ் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோகன்லால் நடித்து முடித்துள்ள மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான ‘மரக்கார்’ மற்றும் புரோ டேடி மற்றும் டுவெல்த்மேன் ஆகிய மூன்று படங்களும் நேரடி ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு விட்டதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸாகி வரும் நிலையில் கேரளாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மேல் ரிலீசாகி குறிப்பிடத்தக்கது.