தமிழ்நாடு
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த நான்கு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக இன்று 9 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும், பல பகுதிகளில் மழை காரணமாக வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து இன்றும் நாளையும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் ஆலோசனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.