உலகம்
இந்தியா உள்பட 42 நாடுகளில் உருமாறிய வைரஸ்: மீண்டும் முதலில் இருந்தா?
இந்தியா உள்பட 42 நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதும் அதன் பின் ஒன்றரை ஆண்டு காலமாக ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வருவதன் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்ப வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அங்கு ஒரு சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் ஏஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் ஏஒய் 4.2 என்ற புதிய உருமாறிய வைரஸ் பரவி வருவதாகவும் குறிப்பாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலத்தில் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் உருமாறிய ஏஒய் 4.2 வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி உள்ளதாகவும் இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடிய தன்மை உடையது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இங்கிலாந்தில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் ஊரடங்கு உள்பா ஒரு சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உருமாறிய வைரஸ் மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருவதால் மீண்டும் முதலில் இருந்தா? என பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.