தமிழ்நாடு
கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்ததை அடுத்து நேற்று ஏழு மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து இருந்தார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்துள்ளதை அடுத்து ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரை வந்த தகவலின்படி தொடர் மழை காரணமாக கடலூர் , புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் விட்டுவிட்டு பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது என்றும், குறிப்பாக செஞ்சியில் நேற்று இரவு ஒரு மணி நேரம் கொட்டிய கனமழை காரணமாக நகரின் பேருந்து நிலையம் குளம்போல் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.