சினிமா
நடிகர் புனித் குமார் மறைவுக்கு அஜித் இரங்கல்…..
கன்னட சினிமா உலகில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரின் மரணம் கன்னட சினிமா உலகம் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் புனித்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்தும் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீ புனித் குமார்-ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்’ என அஜித் தெரிவித்துள்ளார்.