சினிமா செய்திகள்
புனித் ராஜ்குமார் நடிகர் மட்டுமல்ல, அவரை நம்பி இத்தனை பேர்: ஒரு ஆச்சரிய தகவல்!
கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இழப்பு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் மட்டுமல்ல, பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்திருக்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக 45 இலவச பள்ளிக்கூடங்களை அவர் நடத்தி வருகிறார் என்பதும் அதில் 1800 மாணவர்கள் இலவசமாக கல்வி பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 26 அனாதை இல்லங்களை நடத்தி வருகிறார் என்பதும் 16 வயதானவர்களுக்கான இல்லங்களை நடத்தி வருகிறார் என்பதும் இதிலும் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 19 கோசாலைவை அவர் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கெல்லாம் மேலாக தனது இறப்புக்கு பின் தனது கண்களையும் அவர் தானம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மனிதனை நம்பி ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் முதியவர்கள், அனாதைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது உயிர் எப்படி போயிற்று என்று பலர் வருத்தத்துடன் சோகத்துடனும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.