தமிழ்நாடு
கனமழை எதிரொலியால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய நிலையில் சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது என்பதும் இதனால் இன்று காலை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒருசில மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவாரூர், தஞ்சை, திருச்சி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து உள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சென்னை உள்பட வட மாவட்டங்களில் நேற்றிரவு மழை பெய்தாலும் தற்போது வெயில் அடித்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.