தமிழ்நாடு
அன்புமணியுடன் துரை வையாபுரி சந்திப்பு: புதிய கூட்டணியா?
பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் அவர்களை சமீபத்தில் மதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரை வையாபுரி சந்தித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளராக இருந்த வைகோவின் மகன் துரை வையாபுரி அவர்கள் சமீபத்தில் வாக்கெடுப்பின் மூலம் மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. துரை வையாபுரி நியமனத்திற்கு ஒருசில மதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பெரும்பாலான மதிமுக நிர்வாகிகள் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து துரை வையாபுரி தலைமையில் மதிமுக வீரநடை போடும் என்றும் புதிய கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக இளைஞர்களின் வாக்குகளை கவர வாய்ப்பிருப்பதாகவும் மதிமுக தரப்பிலிருந்து கூறப்பட்டது.
இந்த நிலையில் பாமக இளைஞரணி செயலாளரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாசை சற்றுமுன்னர் துரை வையாபுரி சந்தித்துள்ளார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இரண்டு கட்சியிலும் உள்ள இளைய தலைமுறை அரசியல்வாதிகளின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஒரு புதிய கூட்டணி அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளராக பொறுப்பேற்ற பின், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை இன்று 28-10-2021 நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றபோது. pic.twitter.com/fMtfiK8rkx
— Durai Vaiko (@duraivaikooffl) October 28, 2021