Connect with us

தமிழ்நாடு

கோவில் நகைகளை உருக்கக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Published

on

கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படும் வரை கோயில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் தமிழக அரசு எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் அறநிலை துறை அமைச்சகம் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது என்பதும், குறிப்பாக தமிழில் அர்ச்சனை உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கோவில்களில் சாமி சிலைக்கு அணிவிப்பது போக மீதமுள்ள நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் வைத்து அந்த பணத்தின் மூலம் கல்லூரிகள் மற்றும் பிற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் கோவில் நகைகளை உருகுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பதும் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அறங்காவலர்களை நியமிக்கும் வரை கோவில் நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த முடிவும் தமிழக அரசு எடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட நகைகளை கணக்கெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அறங்காவலர் நியமனத்திற்கு பிறகு கோயில் நகைகள் உருக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்17 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!