தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி பட்டாசு கடையில் பயங்கர தீவிபத்து: 6 பேர் உயிரிழப்பு!
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தீபாவளிக்காக பட்டாசு விற்பனை செய்வதற்காக பட்டாசு கடை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கடையில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் கடையில் இருந்த ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். பட்டாசு கடைகள் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.