Connect with us

தமிழ்நாடு

இஸ்லாமியர் என்பதாலே ஷாருக்கானின் மகனை குறிவைப்பதா? சீமான் கண்டனம்!

Published

on

ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக்கான் மகன் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதைப்பொருள் வழக்கில் அத்துமீறல் நடந்திருப்பதாகவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அரங்கேறி வருவதாகவும் இஸ்லாமியர் என்பதால் அவரை குறிவைத்து அரசு அதிகாரம் காய்களை நகர்த்தி வருவதாகவும் அது மட்டுமின்றி 25 கோடி வரை அவரை விடுவிக்க பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆரியன்கானை ஜாமினில் விடுவிப்பதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள், போதை பொருள் பயன்படுத்தும் நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசு கப்பல் நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாருக்கான் மகன் என்பதாலேயே ஆரியன்கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அதே நேரத்தில் முந்த்ரா துறைமுகத்தில் கிட்டத்தட்ட 3000 கிலோ எடையுள்ள 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத பாஜக அரசு ஆர்யன்கான் வழக்கில் மட்டும் தீவிர ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் சீமான் எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் பின்புலத்தில் பெரும்புள்ளிகள் பலர் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை பாயாத நிலையில் ஆரியன்கானுக்க்8உ எதிராக மட்டும் தீவிரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதச்சார்பின்மை என்ற மகத்தான கோட்பாட்டினை குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிரித்து மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது என்றும் பாஜக அரசின் இந்த கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானை பாஜகவின் ‘பி’டீம் என திமுகவினர் உள்பட ஒருசிலர் கூறி வரும் நிலையில் மோடி அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
seithichurul
சினிமா41 நிமிடங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்53 நிமிடங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்1 மணி நேரம் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா24 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு24 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!