சினிமா செய்திகள்
ஷாருக்கான் மகனால் தளபதி விஜய் பட வாய்ப்பை இழந்த பிரபல நடிகை!
ஷாருக்கான் மகனின் போதை பொருள் விவகாரத்தால் விஜய் படத்தின் வாய்ப்பை பிரபல நடிகை ஒருவர் இழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் தற்போது சிறையில் உள்ளார் என்பதும் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஆரியன்கானின் வாட்ஸ்அப் தகவல்களின் அடிப்படையில் பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பதும், இதனை அடுத்து அவர் இன்று அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அனன்யா பாண்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அந்த படத்திலிருந்து அனன்யா பாண்டே நீக்கப்பட்டுவிட்டதாகவும் அவருக்கு பதில் பிரபல தமிழ் நடிகை ஒருவரை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. போதை பொருள் விவகாரத்தால் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த அனன்யா பாண்டே பெரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.