தமிழ்நாடு
தமிழகத்தில் தாமரை அல்ல, புல் கூட முளைக்காது.. ஸ்டாலின் அதிரடி!
திருச்சி: தமிழகத்தில் தண்ணீர் இல்லாததால் புல் கூட முளைக்கவில்லை, எப்படி தாமரை மலரும் என்று பாஜகவை குற்றஞ்சாட்டி திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேகதாது அணைக்கு எதிராக திமுக தனது தோழமை கட்சிகளுடன் போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் நடக்கும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி இருக்கிறார்கள் .
திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக மற்றும் மத்திய அரசை குற்றம்சாட்டி ஸ்டாலின் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேகதாது குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் தனது பேச்சில், காவிரியில் கர்நாடகாவில் உற்பத்தியானாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இது பெரிய வரம். ஆனால் இதை தடுக்க மத்திய அரசுடன் சேர்ந்து கர்நாடக அரசு சதி செய்து வருகிறது. மேகதாது அணைக்கட்டினால் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் வராது.