Connect with us

தமிழ்நாடு

மனைவிக்கு மாப்பிள்ளை தேடி மேட்ரிமோனியில் விளம்பரம் கொடுத்த கணவர் கைது!

Published

on

மனைவிக்கு மாப்பிள்ளை வேண்டும் என மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்த கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே வெளியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஓம் குமார் என்பவருக்கும் கடம்பத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் ஜான்சிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தததால் கணவர் மற்றும் குழந்தையுடன் அமெரிக்காவில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஓம் குமார் மற்றும் ஜான்சி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அமெரிக்காவிலிருந்து ஓம்குமார் திரும்பினார். மேலும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பதும் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவாகரத்து கிடைக்காத ஆத்திரத்தில் ஓம் குமார் தனியார் மேட்ரிமோனியல் ஒன்றில் ஜான்சிக்கு மாப்பிள்ளை வேண்டும் என விளம்பரம் கொடுத்தார். அதில் ஜான்சியின் தந்தையான பத்மநாபனின் செல்போன் எண்ணையும் அவர் கொடுத்திருந்தார்.

இதனை அடுத்து ஜான்சியை திருமணம் செய்ய நூற்றுக்கணக்கானோர் ஆர்வம் காட்டி பத்மநாதனுக்கு போன் செய்தனர். தான் இதுபோல் எந்த விளம்பரமும் கொடுக்கவில்லை என பதிலளித்த பத்மநாபன் ஒரு கட்டத்தில் தினமும் 100 கால்களுக்கும் மேல் வந்ததால் அதிர்ச்சி அடைந்து திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசில் பத்மநாபன் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் ஜான்சியின் கணவர்தான் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுத்தார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தாலி கட்டிய மனைவிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விளம்பரம் கொடுத்த கணவர் ஒருவரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு18 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா18 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!