தமிழ்நாடு
கடற்கரையில் பொதுமக்கள் அனுமதி: கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார்.
அதன்படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மழலையர் பள்ளி அங்கன்வாடி பள்ளிகளில் திறக்கலாம் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதேபோல் அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு பதினோரு மணி வரை செயல்பட அனுமதி என்றும் திருவிழாக்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் திருமண விழாக்களில் 100 பேர் பங்கேற்கலாம் என்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் மழலையர் பள்ளிகள் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இந்த அடுத்தடுத்து அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.